என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்
நீங்கள் தேடியது "மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்"
அடாவடி நடவடிக்கையில் இறங்கும் கவர்னர் புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண் பேடியின் செயல்பாடுகள் பா.ஜனதா கட்சியை வளர்ப்பது போன்ற நடவடிக்கையாக இருப்பதாகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் அங்கீகரிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு பிறப்பித்ததற்கும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துமீறி அடாவடி நடவடிக்கையில் இறங்கும் கவர்னர் புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேருவீதி, மிஷன் வீதி சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் நிலவழகன், தமிழ்செல்வன், நகர கமிட்டி மதிவாணன், நடராஜன், சத்யா, ராமசாமி, அன்புமணி மற்றும் பலர் பங்கேற்றனர். ஊர்வலம் ஜென்மராக்கினி கோவில் வீதி வழியாக வந்தது. அவர்களை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கவர்னரை வெளியேறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
புதுவை கவர்னர் கிரண் பேடியின் செயல்பாடுகள் பா.ஜனதா கட்சியை வளர்ப்பது போன்ற நடவடிக்கையாக இருப்பதாகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் அங்கீகரிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு பிறப்பித்ததற்கும் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துமீறி அடாவடி நடவடிக்கையில் இறங்கும் கவர்னர் புதுவையை விட்டு வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேருவீதி, மிஷன் வீதி சந்திப்பில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் நிலவழகன், தமிழ்செல்வன், நகர கமிட்டி மதிவாணன், நடராஜன், சத்யா, ராமசாமி, அன்புமணி மற்றும் பலர் பங்கேற்றனர். ஊர்வலம் ஜென்மராக்கினி கோவில் வீதி வழியாக வந்தது. அவர்களை ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கவர்னரை வெளியேறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X